சனி, செப்டம்பர் 10, 2011

இரத்த விருத்தி

காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் நல்ல தண்ணீரில் 1 டீஸ்பூன் சுத்த தேன் கலந்து பருகிவர புது இரத்தம் உண்டாகும்

பேரீச்சம் பழத்தைத் தேனில் 3 நாட்கள் ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 வீதம் 3 வேளை சாப்பிட்டால், இரத்தம் ஊறும்

தவசிக்கீரை இலைகளை பிழிந்து சாறு எடுத்து அதை பாலில் கலந்துக் குடித்தால் உடல் பலப்படும்,இரத்தம் விருத்தியாகும்

சம அளவு பொன்னாங்கண்ணி கீரை,கீழா நெல்லி இலைகளை எடுத்து அரைத்து,அதில் நெல்லியளவு எடுத்து பாலில் தினசரி இரவு அருந்தி வந்தால் இரத்த சோகை குறையும்.

நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும்.

கரிசலாங்கண்ணி இலை மற்றும் கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து நெல்லிக்காயளவு எடுத்துப் பாலில் கரைத்து முப்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் குறையும்.

2 கருத்துகள்: